கொரோனா சிகிச்சை: உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு குணமடைந்தார்!

 

கொரோனா சிகிச்சை: உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு குணமடைந்தார்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுரு உடல் நலம் பெற்றதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனா சிகிச்சை: உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு குணமடைந்தார்!கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனாத் தொற்று ஏற்படவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மனைவி, மகன் உள்ளிட்டோருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. எம்.எல்.ஏ குமரகுரு சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையிலேயே அவரது மனைவிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

கொரோனா சிகிச்சை: உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு குணமடைந்தார்!இந்த நிலையில் கொரோனாத் தொற்றில் இருந்து குணமடைந்த எம்.எல்.ஏ குமரகுரு மற்றும் அவரது மனைவி இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள், நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ குமரகுருவும் அவரது மனைவியும் நன்றி தெரிவித்தனர்.