ஒரே நாளில் தி.மு.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா! – ராணிப்பேட்டை காந்திக்கும் உறுதியானது

 

ஒரே நாளில் தி.மு.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா! – ராணிப்பேட்டை காந்திக்கும் உறுதியானது

தி.மு.க-வின் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்திக்கும் கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் தி.மு.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் தி.மு.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா! – ராணிப்பேட்டை காந்திக்கும் உறுதியானது

தமிழகத்தில் தினம் தினம் புதிய உச்சம் என்ற நிலையை நோக்கி கொரோனா சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

இன்று கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதியானதாக காலையில் செய்தி வெளியானது. பிற்பகலில் வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானதாக செய்தி வந்தது. அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஒரே நாளில் தி.மு.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா! – ராணிப்பேட்டை காந்திக்கும் உறுதியானதுமாலையில் ராணிப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஒரே நாளில் மூன்று தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா உறுதியான தகவல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.