தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கும் கொரோனா!

 

தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கும் கொரோனா!
தமிழகத்தில் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் மத்தியில் பரவிய கொரோனா தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது. முதலில் கலெக்டர்கள் அளவில் சிலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. காஞ்சிபுரம், கோவை, சென்னை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டது. தற்போது

தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கும் கொரோனா!

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையர் ஜவகர் ஆகியோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கிண்டி கிங்ஸ் கொரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.