தபால் ஊழியருக்கு கொரோனா : மூடப்பட்ட துணை தபால் அலுவலகம்!

 

தபால் ஊழியருக்கு கொரோனா : மூடப்பட்ட துணை தபால் அலுவலகம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள தனுஷ்கோடியாபுரம் தெருவை சேர்ந்த 56 வயதான தபால் ஊழியர் ஒருவர் கடந்த 7 ஆம் தேதி சென்னையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு கோவில்பட்டிக்கு திரும்பியுள்ளார்.

தபால் ஊழியருக்கு கொரோனா : மூடப்பட்ட துணை தபால் அலுவலகம்!

இதுகுறித்து தகவலறிந்து சுகாதாரத் துறையினர் நேற்று தபால் ஊழியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தபால் ஊழியருக்கு கொரோனா : மூடப்பட்ட துணை தபால் அலுவலகம்!

மேலும் அவர் சென்னைக்கு வந்து திரும்பிய போது அலுவலகம் சென்றுள்ளார். இதனால் அவருடன் பணிபுரியும் 4 நபர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அத்துடன் துணை தபால் அலுவலகத்தினை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.