பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி-க்கு கொரோனா!

 

பிரச்சாரத்தில் ஈடுபட்ட  திமுக எம்.பி-க்கு கொரோனா!

சேலம் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட  திமுக எம்.பி-க்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.ஆரம்ப கட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் புதிதாக 945 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,17,077 ஆக உயர்ந்துள்ளது.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட  திமுக எம்.பி-க்கு கொரோனா!

இந்நிலையில் சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை தொகுதி எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி எம்.பி. பார்த்திபன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.சமீபத்தில் துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர் பாபு மற்றும் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.