சென்னைவாசிகளுக்கு பல்லாவரத்தில் பரிசோதனை! – செங்கல்பட்டு நிர்வாகம் அதிரடி

 

சென்னைவாசிகளுக்கு பல்லாவரத்தில் பரிசோதனை! – செங்கல்பட்டு நிர்வாகம் அதிரடி

சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வரும் மக்களுக்கு பல்லாவரத்தில் கொரோனா உடல் பரிசோதனை செய்து அனுமதிப்பது என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னைவாசிகளுக்கு பல்லாவரத்தில் பரிசோதனை! – செங்கல்பட்டு நிர்வாகம் அதிரடிசென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியான பல்லாவரம் பகுதியில் கொரோனா அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதல் கட்டமாக சென்னையில் இருந்து வரும் மக்களுக்கு பல்லாவரத்தில் வைத்த உடல் வெப்ப சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்கள் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவை குறித்துக்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரியவர்கள் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

சென்னைவாசிகளுக்கு பல்லாவரத்தில் பரிசோதனை! – செங்கல்பட்டு நிர்வாகம் அதிரடி

சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் வர பல்லாவரம் மட்டுமே வழியில்லை. இது தவிர மேலும் பல பிரதான சாலைகள், ஊர் சாலைகள் உள்ளன. புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் ஏராளம். தற்போது பல நிறுவனங்கள் வேலைக்கு வர கட்டாயப்படுத்துகின்றன. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு, சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வேலைக்கு வந்து செல்வது தவிர்க்க முடியாதது. ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தீட்டி கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.