மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா : முக்கிய தகவல் இதோ!

 

மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா : முக்கிய தகவல் இதோ!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், ஒரே நாளில் 16,577 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் பன்மடங்கு அதிகரித்திருப்பதால் அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா, மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரும் நபர்கள், வீட்டிலேயே தங்களை 7 நாட்கள் கட்டாயம் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா : முக்கிய தகவல் இதோ!

பல நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலும் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா அலை தீவிரமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு கொரோனா உறுதியாகவும் 120 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா : முக்கிய தகவல் இதோ!

ஒரு நாளில் 16,577 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் 1,55,986 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை 1,34,72,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 12 ஆயிரத்துக்குள்ளாகவே கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், இன்று 16 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.