‘8 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 517 பேர் மரணம்!

 

‘8 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 517 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், மத்திய அரசு நவ.31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மாதத்திற்கென புதிதாக தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. தற்போது பாதிப்பு குறைந்து வந்தாலும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘8 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 517 பேர் மரணம்!

அதில், கடந்த 24 மணி நேரத்தில் 49,881 பெருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 80,40,203 ஆக அதிகரித்துள்ளதாகவும் 517 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,20,527 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 73,15,989 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததால் 6,03,687 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.