செங்கல்பட்டில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா!

 

செங்கல்பட்டில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா!

நேற்று மட்டும் 61 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா!

இந்நிலையில் செங்கல்பட்டில் மேலும் 111 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 6964 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 128 பேர் இறந்த நிலையில் 2958 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் விழுப்புரத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1272 ஆக அதிகரித்துள்ளது.