மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!
Aug 19, 2020, 07:27 IST1597802265000
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன். வயது 60. இவருக்கு கடந்த 12 ஆம் தேதிகொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு எண் 335 அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு அறையின் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி விக்கிரவாண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மன அழுத்தம் காரணமாக இருசப்பன் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.