கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கணவன்… மனமுடைந்த மனைவி தற்கொலை!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கணவன்… மனமுடைந்த மனைவி தற்கொலை!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கணவன் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மாப்பிள்ளை விநாயகர் தெருவைச் சேர்ந்த காந்தி (52) என்பவரது மனைவி அமுதா (48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமங்கலம் பெரிய கடைவீதியில் இரும்பு கடை மற்றும் பெயிண்ட் கடை நடத்தி வரும் காந்திக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கணவன்… மனமுடைந்த மனைவி தற்கொலை!

அங்கு அவரது உடல்நிலை மோசமானதையடுத்து மதுரை ராஜாஜி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அவருடைய மனைவி அமுதாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டிலேயே அமுதா தனிமைப்படுத்தப்பட்டார். கணவரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த அமுதா, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.