கொரோனா சிகிச்சை மைய மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை!

 

கொரோனா சிகிச்சை மைய  மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை!

திருச்சி

திருச்சி என்.ஐ.டி-யில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ். இவருக்கும், இவரது மனைவி ஜான்சி ராணிக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடந்த 27ஆம் தேதி துவாடிக்குடி என்.ஐ.டி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு 9 மணி அளவில் 2-வது மாடியில் இருந்து ஆரோக்கிய ராஜ் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

கொரோனா சிகிச்சை மைய  மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை!

இதில், படுகாயமடைந்த அவரை, அதிகாரிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆரோக்கியராஜு-க்கு கடந்த 7 வருடமாக மனநிலை பாதிப்பு இருந்ததும், அதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.

மேலும், குடும்ப தகராறில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் 2-வது மாடியில் இருந்து குதித்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.