திருவாரூரில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

 

திருவாரூரில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

திருவாரூர்

திருவாரூரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் நகர் நாலுகால் மண்டபம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன் (65). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. குறைந்த அளவிலான பாதிப்பு இருந்ததால், வீட்டிலேயே தனிமைப் படுத்தி கொண்டு சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

திருவாரூரில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

அதன் படி, லோகநாதன் வீட்டில் தனிமைத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில், வைரஸ் தொற்று ஏற்படடதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த லோகநாதன், நேற்று வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருவாருர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சுகாதாரத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.