கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

 

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா மீதான அச்சம், தனிமையில் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக சிலர் சிகிச்சையில் இருக்கும்போது இதுபோன்ற விபரீத முடிவை எடுத்து வருகின்றனர்.

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் 3 வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். ஆலப்பாக்கத்தை சேர்ந்த சந்திரசேகர் (54) என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் திடீரென மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டபோது, இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. தெரியாமல் கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.