ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று!

 

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று!

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று!

சென்னை மற்றும் கொல்கத்தா நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். இவர் நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களும் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் நீதிபதி கர்ணன் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பவே கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி கர்ணன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் கர்ணன் நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு அவரை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.