காஞ்சிபுரத்தில் 7 ஆயிரத்தை கடந்தது கொரோனா : தொற்று அதிகரிப்பால் பீதியில் மக்கள்!
Jul 26, 2020, 14:05 IST1595752556000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,143 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது.