இலங்கையில் கைதான மீனவருக்கு கொரோனா!
இலங்கையில் எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதியானது.
கடந்த 9ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 300 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்கினர். இதில் மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்தது. இதை தொடர்ந்து ஒரு படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 9 தமிழக மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இலங்கையில் எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவரை ஜனவரி 11இல் இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.