கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா
Oct 12, 2020, 13:29 IST1602489565000
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மேலும் 108 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 782 ஆக
அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து 12 ஆயிரத்து 849 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 684 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து குமரி மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.