ஆளுநர் மாளிகையில் 92 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா!

 

ஆளுநர் மாளிகையில் 92 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 92 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் 92 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா!
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. யாரும் எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு வனப் பகுதியில் இந்த மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் பாதுகாப்புப் பணியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் 92 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா!மகாராஷ்டிரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா செய்தி வெளியான நிலையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள 92 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகையில் 92 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு கொரோனா!இவர்கள் அனைவரும் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்புக்கு புதிதாக வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.