61 முகவர்களுக்கு கொரோனா… விழி பிதுங்கும் தேர்தல் ஆணையம்!

 

61 முகவர்களுக்கு கொரோனா… விழி பிதுங்கும் தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்பில் கலந்துகொள்ள கலந்துகொள்ள உள்ள பூத் முகவர்கள் வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஆகியோர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

61 முகவர்களுக்கு கொரோனா… விழி பிதுங்கும் தேர்தல் ஆணையம்!

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் என 2,527 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கையின் போது ஈடுபடவுள்ள முகவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

61 முகவர்களுக்கு கொரோனா… விழி பிதுங்கும் தேர்தல் ஆணையம்!

முன்னதாக விருதுநகரில் நேற்று ஒரேநாளில் 297 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில், நேற்று முன் தினம் மட்டும் 226 பேர் விருதுநகரில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 110 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பிய நிலையில், 1548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று விருதுநகரை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.