தமிழகத்தில் மேலும் 5,834 பேருக்கு கொரோனா! இன்று 118 பேர் உயிரிழப்பு!

 

தமிழகத்தில் மேலும் 5,834 பேருக்கு கொரோனா! இன்று 118 பேர் உயிரிழப்பு!

மிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 986 பேருக்கு இன்றைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி, மொத்தம் 3,08,649 என்ற கணக்கில் உள்ளது.

மேலும், மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலவரத்தின்படி, தற்போது 52, 810 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 71 பேர், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 47 பேர் என மொத்தம் 118 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்றைக்கு 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,50,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.