மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா!

 

மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா!

நடப்பாண்டுக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டுடன் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. முறைகேட்டை தவிர்ப்பதற்காகவே மருத்துவ கலந்தாய்வு நேரில் நடத்தப்பட்ட நிலையில், உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது.

மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா!

மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்வதற்கு முன்னர் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டடு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக 262 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்ட நிலையில், 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் கலந்தாய்வில் பங்கேற்ற அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.