கொரோனா பாபா : 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்களுடன் அசத்தல் அலங்காரம்!

 

கொரோனா  பாபா :  3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்களுடன் அசத்தல் அலங்காரம்!

இந்தியாவில் 3வது அலை உருவாகாமல் இருக்க சாய்பாபா கோவிலில் கொரோனா அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

கொரோனா  பாபா :  3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்களுடன் அசத்தல் அலங்காரம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,22,022 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை இன்னும் ஓரிரு வாரங்களில் வரக்கூடும் என்று எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.இருப்பினும் கொரோனா மூன்றாம் அலை தாக்கத்தை குறைக்க தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

கொரோனா  பாபா :  3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்களுடன் அசத்தல் அலங்காரம்!

இந்நிலையில் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், இந்தியாவில் 3வது அலை உருவாகாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்து சாய்பாபாவுக்கு 3,00,000 லட்சம் மாத்திரைகள், 10000 முகக்கவசங்கள், 2000 சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், மற்ற உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. இந்த வழிப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் தேஜஸ்வி சூர்யா எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த 4 தினங்களாக சாய்பாபாவுக்கு கொரோனா அலங்காரம் செய்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.