ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா உறுதி!

 

ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா உறுதி!

‘ஜன கண மன’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதால், தனக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மலையாள நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது ‘ஆடுஜீவிதம்’ படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் பிரித்விராஜ், அங்கேயே சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அந்த படகுழுவும் வெளிநாட்டிலேயே சிக்கிக் கொண்டது. அதன் பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பிய பிரித்விராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா உறுதி!

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர், ‘ஜன கண மன’ ஷூட்டிங்கில் பங்கேற்றார். உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஷூட்டிங் எடுக்கப்பட்ட நிலையில், இறுதி நாளின் போது எல்லாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, பிரித்விராஜ்க்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா உறுதி!

இது குறித்து பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிவிட்டது. நான் வீட்டிலேயே தனிமை இருக்கிறேன். எனக்கு அறிகுறி ஏதும் இல்லை, நலமாக இருக்கிறேன். அனைவரது அன்பு மற்றும் அக்கரைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா உறுதி!