காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா உறுதி!

 

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா உறுதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் ஆசாத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவரின் பரிந்துரையின் பேரில், தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிகிறது.