திமுக எம்எல்ஏ மதிவாணனுக்கு கொரோனா உறுதி; அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகும் எம்எல்ஏக்கள்!

 

திமுக எம்எல்ஏ மதிவாணனுக்கு கொரோனா உறுதி; அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகும் எம்எல்ஏக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக எம்எல்ஏக்களும், கொரோனா களப்பணியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்ஏக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்எல்ஏக்களும் எம்பிக்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக எம்எல்ஏ மதிவாணனுக்கு கொரோனா உறுதி; அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகும் எம்எல்ஏக்கள்!

இந்த நிலையில், மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் திமுக எம்எல்ஏ மதிவாணனுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.