திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

 

திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை எல்லாரையும் பாரபட்சமின்றி தாக்குகிறது கொரோனா. இதில் ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இதனிடையே அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு பரவிருப்பதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டத்தில் இன்று சுப்பிரமணியன் பங்கேற்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.