சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

 

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட உதவிகள், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி என பல பணிகளில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இதுவரை திமுக எம்எல்ஏக்கள், அதிமுக எம்எல்ஏக்கள் பலருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில் அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அதிமுக எம்எல்ஏவான மாணிக்கத்திற்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.