“என் பெற்றோருக்கு கொரோனா உறுதி” நடிகை சார்மியின் கவலைப் பதிவு!

 

“என் பெற்றோருக்கு கொரோனா உறுதி” நடிகை சார்மியின் கவலைப் பதிவு!

நடிகை சார்மியின் பெற்றோருக்கு கொரோனா உறுதியானதால் அவர்கள், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“என் பெற்றோருக்கு கொரோனா உறுதி” நடிகை சார்மியின் கவலைப் பதிவு!

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வரை பாரபட்சமின்றி பரவி வருகிறது. அண்மையில் நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில், தனது பெற்றோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக நடிகை சார்மி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“என் பெற்றோருக்கு கொரோனா உறுதி” நடிகை சார்மியின் கவலைப் பதிவு!

அந்த பதிவில், “என் பெற்றோர்கள் மார்ச் மாதத்தில் இருந்தே தனிமையில் தான் இருந்து வந்தார்கள். ஆனால், ஹைதராபாத் வெள்ளமும் மாசும் அவர்களை காரோணவுக்கு ஆளாகச் செய்து விட்டது.

“என் பெற்றோருக்கு கொரோனா உறுதி” நடிகை சார்மியின் கவலைப் பதிவு!

ஏற்கனவே பல பிரச்னைகளை சந்தித்து வரும் என் அப்பாவுக்கு தற்போது கொரோனா உறுதியாகியிருப்பதை அறிந்து நான் உடைந்து விட்டேன். எனது அம்மா, அப்பா இரண்டு பேருமே ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனக்கு தெரிந்த டாக்டர் தான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார். அவர் மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது பெற்றோரும் சிகிச்சையில் நன்றாக தேறி வருகிறார்கள். இதில் இருந்து நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை இது தான். அறிகுறி இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். துர்கா அம்மா தீமையில் இருந்து உங்களை காக்கட்டும்.” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.