விமானத்தில் பயணம் செய்த இளைஞருக்கு கொரோனா..பாதிப்பு தெரியாமல் விமானம் ரிட்டன் சென்னை வந்ததால் பீதியில் பயணிகள்!

 

விமானத்தில் பயணம் செய்த இளைஞருக்கு கொரோனா..பாதிப்பு தெரியாமல் விமானம் ரிட்டன் சென்னை வந்ததால் பீதியில் பயணிகள்!

கொரோனா வைரஸால் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 114 பேர் பயணித்த சென்னை- கோவை இண்டிகோ விமானத்தில் ஒரு இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த இளைஞருக்கு கொரோனா..பாதிப்பு தெரியாமல் விமானம் ரிட்டன் சென்னை வந்ததால் பீதியில் பயணிகள்!

கோவையை சேர்ந்த அந்த இளைஞர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இண்டிகோ விமானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 25 ஆம் தேதி சென்னையில் இருந்து வந்த இளைஞர் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் பயணித்த எல்லா பயணிகளுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ள தால் மற்ற பயணிகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பு குறைவு. தங்களின் அனைத்து விமானங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நபர் பயணித்த விமானமும் தூய்மை படுத்தப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த இளைஞருக்கு கொரோனா..பாதிப்பு தெரியாமல் விமானம் ரிட்டன் சென்னை வந்ததால் பீதியில் பயணிகள்!

மேலும், அந்த விமானத்தை இயக்கிய குழுவினர் தனிமைப்படுத்திக் கொண்டதால் பயணிகளின் பாதுகாப்பை கண்காணித்து உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. அந்த இளைஞருடன் பயணித்த 113 பேருக்கும் கொரோனா இல்லை என்றாலும், அந்த விமானம் கோவையில் 8 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 8.40 மணிக்கு சென்னை புறப்பட்டு வந்துள்ளது. அதனால் அப்போது பயணித்த எல்லா பயணிகளையும் சோதனை செய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.