சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஊழியர்கள் 56 பேருக்கு கொரோனா உறுதி!

 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஊழியர்கள் 56 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் சென்னையில் தான் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஊழியர்கள் 56 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஓமந்தூரார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல அரசின் உத்தரவின் படி பல தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சில நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதன் படி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் ஊழியர்கள் 56 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பரிசோதனை முடிவு மருத்துவக் குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.