சர்ச்சை ஆடியோ – கண்ணீர்மல்க பொதுமன்னிப்பு கோரிய திமுக நிர்வாகி

 

சர்ச்சை ஆடியோ – கண்ணீர்மல்க பொதுமன்னிப்பு கோரிய திமுக நிர்வாகி

திருச்சி

குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக, திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் கண்ணீர்மல்க பொதுமன்னிப்பு கேட்டுகொண்டார்.காடுவெட்டி தியாகராஜன் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்தும், காவல்துறை மாண்பை கெடுக்கும் வகையிலும் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காடுவெட்டி தியாகராஜன் மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை இழிவாக பேசும் விதமான ஆடியோ ஒன்று வெளியானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

சர்ச்சை ஆடியோ – கண்ணீர்மல்க பொதுமன்னிப்பு கோரிய திமுக நிர்வாகி

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில், வ.உ.சி பேரவை மற்றும் சோழிய வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் இன்று மாலை தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட சமுதாய பெண்களையும், காவல் துறையினரையும் இழிவாக பேசியதற்காக, காடுவெட்டி தியாகராஜன் வருத்தம் தெரிவித்து, கண்ணீர் விட்டு அழுது பொதுமன்னிப்பு கோரினார்.

சர்ச்சை ஆடியோ – கண்ணீர்மல்க பொதுமன்னிப்பு கோரிய திமுக நிர்வாகி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை குறித்து தவறான விமர்சனத்தை ஏற்படுத்தி, தனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செயல்பட்டு வருவதாகவும், இது அந்த சமுதாய மக்களிடையே அழுத்தத்தை ஏற்படுத்தியதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். இதனிடையே, தங்கள் சமுதாய பெண்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக காடுவெட்டி தியாகராஜன் பொதுமன்னிப்பு கேட்டுகொண்டதாகவும், இதனை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் வெள்ளாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.