தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் பேருந்துகள் தேவையா ? இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!

 

தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் பேருந்துகள் தேவையா ? இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. பெரும்பாலான சேவைகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், பொது போக்குவரத்துக்கு சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. மக்கள் சொந்த வாகனங்களில் தான் வெளியே செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. பொதுப்போக்குவரத்து கொரோனா பாதிப்பு முடிந்தால் தான் தொடக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களின் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் பேருந்துகள் தேவையா ? இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!

இந்த நிலையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால் தொழில் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால் 94450 14402, 94450 14416, 95550 14463 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் tnexpress16@gmail.com என்ற இணையத்தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.