வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி!

 

வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி!

திருவாரூர்

திருவாரூர் அருகே கட்டுமான பணியின்போது மின்சாராம் தாக்கி செண்ட்ரிங் தொழிலாளி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடி மேலத் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் செண்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கயல்விழி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் பூனாயிருப்பு சன்னிதி பகுதியில் தமிழக அரசின் தொகுப்பு விட்டிற்கான கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை அந்த பகுதியில் பெய்த பரவலாக மழை பெய்த நிலையில் சுவர்கள் ஈரமுடன் காணப்பட்டு உள்ளது.

வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி!

இந்த நிலையில், கான்கிரீட் போடுவதற்காக கோபாலகிருஷ்ணன் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.