கோவை அருகே கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை!

 

கோவை அருகே கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை!

கோவை

கோவை அருகே கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கோவில்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கோவை அருகே கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை!

அப்போது, உயிரிழந்த நபர் குரும்பபாளையம் வடக்கு வீதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கணேசன் என்பது தெரிய வந்தது. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்ற நிலையில், கணேசன் தனது தாயாருடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது.

இதனை அடுத்து, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.