ஈரோட்டில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

ஈரோட்டில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு

ஈரோட்டில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு அடிக்கடி காதுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் வெங்கடேசன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

ஈரோட்டில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் படுத்துத் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் வெங்கடேசன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை கண் விழித்த பெற்றோர், மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.