நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஈரோடு ஆக 28 –
நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும ஜெ இ இ. தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ .பி. ரவி தலைமை தாங்கினார் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் விவசாய பிரிவு பெரியசாமி வக்கீல் பாஸ்கர் மண்டல தலைவர்கள் அயுப் அலி ஜாபர் சாதிக் திருச்செல்வம் பொதுச் செயலாளர் கனகராஜ் வின்சென்ட் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் முகமது அர்சத் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையம் எல்ஐசி நகரில் நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது முன்னாள் எம்எல்ஏ ஆர் எம் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் முத்துக்குமார் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வினோத்குமார் மாணவரணி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பயாஸ் அலி மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் சயூசிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

– ரமேஷ் கந்தசாமி