காங்கிரஸ் எம்.எல்.ஏ கொரோனாவால் மரணம்!

 

காங்கிரஸ் எம்.எல்.ஏ கொரோனாவால் மரணம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இதனிடையே அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. பலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ கொரோனாவால் மரணம்!

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் டெக்லூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவுசாஹேப் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பண்டார்பூர் தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ பாரத் பால்கே கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.