முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

 

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் 4 முறை தேர்தலில் வென்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனின் அமமுக கட்சியில் தன்னை இணைந்து மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

இந்நிலையில் சிவராஜ் உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான திருக்கோவிலூர் கொண்டுஸ் செல்லப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.