ப.சிதம்பரத்தை எதிர்த்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி; கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

 

ப.சிதம்பரத்தை எதிர்த்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி; கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி மானாமதுரை அருகே காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அக்கூட்டத்தின் போது காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு ப.சிதம்பரத்துடன் கடும் வாங்குவாதத்தில் ஈடுபட்டார். காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரத்தை அவர் எதிர்த்து பேசியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ப.சிதம்பரத்தை எதிர்த்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி; கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

இந்த நிலையில், பாண்டிவேலுவின் பதவியை பறித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டத்தின் போது மற்றவர்களை பேச விடாமல் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்க உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.