தோனி – ரெய்னா இடையே மோதல்? அதிர்ச்சி தரும் பின்னணி!

 

தோனி – ரெய்னா இடையே மோதல்? அதிர்ச்சி தரும் பின்னணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி – துணை கேப்டன் ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது

ஐபிஎல் 2020 போட்டிக்காக துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அணியின் துணை கேப்டன் சுரேஷ் விலகி மீண்டும் இந்தியா திரும்பினார். சுரேஷ் ரெய்னா மாமா கொல்லப்பட்டதாகவும் அதனால் அவர் இந்தியா திரும்பியதாகவும் செய்தி வெளியாகின.

தோனி – ரெய்னா இடையே மோதல்? அதிர்ச்சி தரும் பின்னணி!

இந்நிலையில் கேப்டன் தோனி – துணை கேப்டன் ரெய்னா இடையே மோதலால் தான் ரெய்னா நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் தோனிக்கு தந்ததைப் போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தி என கூறப்படுகிறது. கொரோனா விதிமுறையால் உடனே அறையை மாற்ற முடியாது என சென்னை அணி நிர்வாகம் கூறியதாகவும் தெரிகிறது.

தோனி – ரெய்னா இடையே மோதல்? அதிர்ச்சி தரும் பின்னணி!

மேலும் தோனி அறிவுரை படி சென்னையில் நடந்த முகாம் பற்றியும் அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானால் அச்சத்தில் அவர் ஊர் திரும்பியதாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.