நடிகை மீரா மிதுன் மீது ஜோதிகா ரசிகை புகார்! நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என ஆவேசம்

 

நடிகை மீரா மிதுன் மீது ஜோதிகா ரசிகை புகார்! நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என ஆவேசம்

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே நடிகை மீரா மிதுன் தூண்டுதலின் பேரில் தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் நேற்று கிழக்கு காவல் கண்காணிப்பாளரிடம் நடிகர் சூர்யா ஜோதிகா உள்ளிட்டோரை அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசியதாக அவர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.

நடிகை மீரா மிதுன் மீது ஜோதிகா ரசிகை புகார்! நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என ஆவேசம்

இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீராமிதுன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை ஜோதிகா குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூராக பேசிய மீரா மிதூன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோதிகா ரசிகை புகார் அளித்துள்ளார். மீரா மீதூன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜோதிகா ரசிகர்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவோதோடு தீ குளிக்கவிருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.