பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என பேசியதாக எம்.பி ஜோதிமணி மீது இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

 

பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என பேசியதாக எம்.பி ஜோதிமணி மீது இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

கரூர் எம்பி ஜோதிமணி நேற்று தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட பாஜக கரு.நாகராஜன் ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த எம்பி ஜோதிமணி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. எம்.பி.ஜோதிமணியும் பாஜக குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது.

rr

பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என பேசியதாக எம்.பி ஜோதிமணி மீது இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

இந்நிலையில் கரூர் எம்பி  ஜோதிமணி மீது இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியதாகவும் அதனால் ஜோதிமணியை கைது செய்ய வேண்டும் எனவும் அன்னவாசல் பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் ரெங்கையா என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுகொண்ட போலீசார் அவருக்கு மனு ரசீது அளித்துள்ளனர். புகாரில் பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் எனவும் வன்முறையை தூண்டும் வகையிலும் எம்பி ஜோதிமணி பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.