ஹரி நாடார் மீது மோசடி புகார்!

 

ஹரி நாடார் மீது மோசடி புகார்!

மலையாள டிவி சேனல் இயக்குநரிடம் 63 லட்சம் மோசடி செய்ததாக ஹரி நாடார், மூர்த்தி தேவர் மீது நெல்லை காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முன்னணி செய்தி சேனல் இந்தியா விஷன் டிவி. இதன் இயக்குநரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி ஹரி நாடார், மூர்த்தி தேவர் ஆகியோர் ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஹரி நாடார் மீது மோசடி புகார்!

ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் ஹரி நாடாரும், நெல்லை சேதுராம பாண்டியனின் பேரன் மூர்த்தி தேவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.