அதிமுக வேட்பாளர் மீது அதிமுகவினரே மிரட்டல் புகார்

 

அதிமுக வேட்பாளர் மீது அதிமுகவினரே மிரட்டல் புகார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கவிருக்கிறது. மொத்தமாக 234 தொகுதிகளிலும் சேர்த்து 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 6.28 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள நிலையில், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இம்முறை கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர் மீது அதிமுகவினரே மிரட்டல் புகார்

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல்நிலையத்தில் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் மீது ஊராட்சி செயலாளர் மிரட்டல் புகார் விடுத்துள்ளார். பணப்பட்டுவாடா செய்யும்படி வீட்டிற்கு வந்து வற்புறுத்தியதாக பவுன்ராஜ் மீது ஊராட்சி செயலாளர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார். பணப்பட்டுவாடா செய்ய மறுத்த தங்கமணியிடம் ஐடி ரெய்டு செய்ய சொல்கிறேன் என பவுன் ராஜ் மிரட்டியுள்ளார். ஊராட்சி செயலாளர் தங்கமணி வீட்டில் நேற்று நடைபெற்ற வருமான வரி சோதனையில் எதுவும் சிக்கவில்லை. மிரட்டிய பவுன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக ஊராட்சி செயலாளர் தங்கமணி போலீசிடம் வலியுறுத்தியுள்ளார்.