நியூ இயர் பார்ட்டியில் கும்மாளம் – நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்!

 

நியூ இயர் பார்ட்டியில் கும்மாளம் – நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்!

புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் குடியிருப்பு நலச்சங்க செயலாளர் புகார் அளித்துள்ளார்.

அவர் கொடுத்த புகாரில், இன்று அதிகாலை 2ஏமற்றும் 2பி பிளாட்களில் இருந்து சத்தமான இசை கேட்டது. இதைக் கேட்க நான் சென்ற போது உள்ளே இருந்தவர்கள் கதவை திறக்க மறுத்துவிட்டனர். பலர் கதவை தட்டியும் அவர்கள் திறக்காத நிலையில், சத்தம் அதிகமாகி கொண்டே இருந்ததால் நாங்கள் 100க்கு அழைப்பு விடுத்தோம். உடனே 2 காவலர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்தனர்.

நியூ இயர் பார்ட்டியில் கும்மாளம் – நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்!

விஷ்ணு விஷாலிடம் விசாரிக்க நாங்கள் சென்ற போது, அவர் தவறான வார்த்தைகளால் பேசினார். தான் என்ன செய்தாலும் சட்டம் ஏதும் செய்யாது என்பது போல பேசினார். இன்று மட்டுமல்ல. இந்த சம்பவம் பல நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவர்கள் புத்தாண்டு பார்ட்டி நடத்த திட்டம் இருந்ததை அறிந்து நாங்கள் அறிவிப்பு ஒன்று வெளியிட்டதால், அந்த பார்ட்டி நிறுத்தப்பட்டது.

நியூ இயர் பார்ட்டியில் கும்மாளம் – நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்!

தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . இவர்கள் இது போன்று பார்ட்டிகள் செய்வதால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். என்னைப் போன்று இரண்டு குடும்பங்கள் இந்த பிளாட்டில் இருக்கின்றன. தெரியாத நண்பர்களை அழைத்து வருவது, குடியிருப்பு சொத்துகளை தவறாக பயன்படுத்துவது போன்ற எல்லாவற்றுக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. இதனால் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்