“கர்ணமே அடித்தாலும் பாஜகவால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது” – தா.பாண்டியன் தாக்கு!

 

“கர்ணமே அடித்தாலும் பாஜகவால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது” – தா.பாண்டியன் தாக்கு!

தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் விடுதலை நாளை கொண்டாடும் விதமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், டெபாசிட் வாங்காத கிரண்பேடியை ஆளுநராக நியமித்திருக்கிறது பாஜக அரசு. இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு தடையாக இருக்கும் அவரை வேறு மாநிலத்திற்கோ அல்லது டெல்லிக்கோ மோடி அழைக்க வேண்டும் என கூறினார்.

“கர்ணமே அடித்தாலும் பாஜகவால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது” – தா.பாண்டியன் தாக்கு!

தொடர்ந்து என்ன செய்தாலும், கர்ணமே அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என்றும் ஆட்சியை விலை கொடுத்து கூட வாங்க முடியாது என தெரிவித்தார். மேலும், பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இருக்காது, ஏனெனில் எங்கே சென்றாலும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்.