“எலக்ட்ரிஷியன் போல் வந்து ,லைட்டை அணைத்துவிட்டு,இருட்டுக்குள்..”-இளம் பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளிக்கு தூக்கு , …

 

“எலக்ட்ரிஷியன்  போல் வந்து ,லைட்டை அணைத்துவிட்டு,இருட்டுக்குள்..”-இளம் பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளிக்கு தூக்கு , …

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே நந்தன்காட்டின் டங்கபாரா கிராமத்தைச் சேர்ந்த கமருஸ்மான் என்ற 42 வயது சைக்கோ கொலைகாரனுக்கு, கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கல்னாவில் உள்ள நீதிமன்றம் கடந்த ஆண்டு மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதித்துள்ளது.

“எலக்ட்ரிஷியன்  போல் வந்து ,லைட்டை அணைத்துவிட்டு,இருட்டுக்குள்..”-இளம் பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளிக்கு தூக்கு , …
இவர் பல ஆண்டுகளாக மின்சார வாரிய ஊழியர் போல வேடமிட்டு தனியாக இருக்கும் பெண்களின் வீட்டிற்குள் நுழைந்து, லைட்டை எரியாமல் செய்துவிட்டு ,இருட்டுக்குள் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளார் .கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பத்தாம் வகுப்பு மாணவியையும் இதுபோல மின்சார ஊழியர் வேடமிட்டு வீட்டிற்குள் வந்து ,பலாத்காரம் செய்து இரும்பு தடியால் அச்சிறுமியின் தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார் .

“எலக்ட்ரிஷியன்  போல் வந்து ,லைட்டை அணைத்துவிட்டு,இருட்டுக்குள்..”-இளம் பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளிக்கு தூக்கு , …
அதன்பிறகு வெளியே போய்விட்டு வீட்டிற்க்குள் நுழைந்த அவரின் தாய் வீட்டில் மகள் பிணமாக ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று போலீசை அணுகினார் .போலீஸ் விசாரணையில் கமருஸ்மான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக நடந்த இந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.