தஞ்சை அருகே குடும்ப தகராறில் கல்லூரி மாணவி தற்கொலை!

 

தஞ்சை அருகே குடும்ப தகராறில் கல்லூரி மாணவி தற்கொலை!

தஞ்சை

தஞ்சை அருகே குடும்ப தகராறில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த ராஜகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், நிவேதா(20) என்ற மகளும் உள்ளனர். நிவேதா திருவையாறில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தஞ்சை அருகே குடும்ப தகராறில் கல்லூரி மாணவி தற்கொலை!

இந்த நிலையில், குடும்ப தகராறில் ஜெயந்தி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தாயார் தற்கொலைக்கு முயன்றதால் மனமுடைந்த நிவேதா, வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மயங்கிய நிலையில் கிடந்த நிவேதாவை உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நிவேதா உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.