ஒரு சவரன் நகைக்காக கல்லூரி மாணவியை கொலை செய்த கொத்தனார்

 

ஒரு சவரன் நகைக்காக கல்லூரி மாணவியை கொலை செய்த கொத்தனார்

சென்னை பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி மீனாஈ17)கொலை செய்து கழுத்தில் அணிந்து இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட மீனா வீட்டில் கட்டிட வேலை செய்து வந்த சண்முகம், வீட்டில் தனியாக இருந்த மீனாவின்ஒன்றரை சவரன் தங்க நகை மற்றும் செல்போனை கொள்ளை அடித்து சென்றுள்ளார். மேலும் மீனா மீனாவை கத்திரிக்கோளால் குத்தி கொலை செய்து தலைமறைவாகியுள்ளார். சம்பவத்தின் போது சண்முகம் அணிந்திருந்த சட்டையை கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினார், சண்முகத்தை தீவிரமாக தேடிவந்தனர். தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு தலைமறைவாக இருந்த கொலையாளி சண்முகத்தை பூந்தமல்லி தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்துள்ளனர்.

ஒரு சவரன் நகைக்காக கல்லூரி மாணவியை கொலை செய்த கொத்தனார்

கொலை செய்து விட்டு நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளிலேயே சென்றது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரத்தில் வைத்து சண்முகத்தை போலீசார் கைது செய்த காவல்துறையினர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலையில் மீனா வீட்டிற்கு வந்தவர் ஆட்கள் இருந்ததால் சென்று விட்டு பின்னர் மீண்டும் வந்து மீனாவை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.